முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

தி.மு.க. vs காங்கிரஸ்
திடீரென வெடித்த புதுக்கோட்டை பூசல்!




தி.மு.க.வின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசுவின் கைக்கூலியான போலீசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் பிப்ரவரி 27 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்...

-இப்படியான போஸ்டர்கள் புதுக்கோட்டையில் கடந்த வாரம் பரபரப்பைக் கிளப்பின. மேலும் ‘கூட்டணி முறிந்துவிடுமோ?’ என்ற குழப்பம் தொற்றிக்கொண்டது புதுக்கோட்டையில்.

அரசுவுக்கும் காங்கிரஸுக்கும் என்ன மோதல்?

‘‘புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அதிரான் விடுதி கிராமத்தில் தலித் குடும்பத்துக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பகவதி கைப்பற்ற முயன்றார். இதற்கு ஊர்க்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பகவதி அங்கே அமைத்த வரப்பையும் உடைத்துவிட்டனர். காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் ஜெகநாதனும் இதே ஊரைச் சேர்ந்தவர். எனவே இந்த விவகாரத்தில் ஜெகநாதன் மீது வழக்குப் போட்டே ஆகவேண்டும் என்று தி.மு.க. மாவட்டச் செயலாளர் அரசு போலீஸ் அதிகாரிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து வழக்கு போட வைத்திருக்கிறார். அதைக் கண்டித்துதான் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தோம். ஆனால் மேலிடத்திலிருந்து பேசி ஆஃப் பண்ணிவிட்டார்கள்’’ என குமுறலாக கூறினார்கள் காங்கிரஸார்.

இவ்வழக்கில் உயர் நீதிமன்றம் மூலம் முன் ஜாமீன் பெற்று வெளியே இருக்கும் ஜெகநாதனை சந்தித்துப் பேசினோம்.

‘‘வெளியூரைச் சேர்ந்த தி.மு.க.-காரரான பகவதி ஏற்கெனவே எங்கள் ஊரில் ஒரு தலித் குடும்பத்தின் நிலத்தை ஆக்ரமித்ததாக புகாருக்கு உள்ளானவர். இப்போது மறுபடியும் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஆக்ரமித்து அதில் கரும்பும் பயிரிட்டுவிட்டார். ஊர்க்காரர்கள் இதை எதிர்த்து கரும்புப் பயிரை எல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டார்கள்.

இது என் ஊரில் நடந்த விவகாரம் என்பதால், பகவதி மீது போலீஸில் புகார் செய்யச் சொன்னேன். புகார் செய்யப்பட்ட பிறகுதான் போலீஸ் ஸ்டேஷன் சென்றேன். நான் ஸ்டேஷனில் இருந்தபோது பகவதியின் கடையில் இருந்த நாற்காலிகளை என் அண்ணன் பையன் உள்ளிட்ட சிலர் உடைத்துவிட்டதாக போன் வந்தது.

இதை வைத்து ‘என் தலைமையில்தான் பகவதியின் கடை உடைக்கப்பட்டது’ என்று சொல்லி என் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் அரசு உத்தரவு போட்டிருக்கிறார். இதை இன்ஸ்பெக்டரே என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

மேலும், அந்த சம்பவத்துக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என டி.எஸ்.பி.யே அரசுவிடம் சொல்லியும் என் மீது வழக்குப் போட்டே ஆகவேண்டும் என அரசு ஆர்டர் போட... வேறு வழியில்லாமல் என் மீது வழக்கு போட்டனர். நான் இப்போது ஜாமீனில் இருக்கிறேன். அரசுவின் தேவையில்லாத இந்த செயல்பாடுகள் பற்றி மேலிடத்துக்கு சொல்லிவிட்டு ஆர்ப்பாட்டத்துக்குத் தயாரானோம். தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிக்கு இதனால் பிரச்னை ஆகிவிடக் கூடாது என மேலிடமும் சொன்னதால் ஆர்ப்பாட்டத்தை நிறுத்திவிட்டோம்’’ என்றார் ஜெகநாதன்.

மேலும் சில காங்கிரஸாரோ... ‘‘2001&ல் ஜெகநாதன் மாவட்ட கவுன்சிலராக இருந்தபோது, அரசுவின் அக்கா மணிமேகலை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது மணிமேகலைக்கு ஜெகநாதன் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதை மனதில் வைத்துதான் இப்போது ஜெகநாதனை வாருகிறார் அரசு’’ என்கிறார்கள்.

இதுபற்றி தி.மு.க. மாவட்ட செயலாளர் அரசுவிடம் கேட்டோம். ‘‘அதெல்லாம் பேசி முடிச்சாச்சே’’ என மழுப்பினார்.

ஆனாலும் காங்கிரஸார் கனன்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.






அபு


Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நிர்மூலமான நித்யானந்தா
கமிஷன்... கடத்தில்... பலாத்காரம்..!
தி.மு.க. vs காங்கிரஸ்
அடுத்த என்கவுன்ட்டர் ‘அட்டாக்’ பாண்டி-
தேர் திருவிழாவில் ஹீரோவான பி.ஜே.பி., எம்.எல்.ஏ.!
‘ஒரு ரூபாய் நாணய’ வேட்டைக் கும்பல்!
தோடடக் கலைத் தொழிலாளர்கள்!
குறைவான நிறைகள்; நிறைவான குறைகள்
கலைஞர் கட்டளை:
தென்னவனுக்கு வலைவீசும் அ.தி.மு.க.!
அமைச்சர்கள்... அங்கே அப்படி.!
பயத்தில் பயணகள்; பரிதவிப்பில் தொழிலாளர்கள்!
நிதியில்லாமல் நீதியில்லை!