முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டம்:
ஏழைகளின் உயர்வல்விக்கு வேட்டு?
- அபாய சங்கு ஊதும் பேராசிரியர்கள்‘



ஐந்து அரசுக் கல்லூரிகளை பல்கலைக்-கழக-மாகத் தரம் உயர்த்தும் அரசின் திட்டத்-துக்கு, எதிராக தமிழ்நாடு முழுக்க உள்ள 69 அரசுக் கல்லூரிகள் முன்பு கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் வாயிற்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றினால், நல்லதுதானே. ‘அதற்கு ஏன் போராட்டம்?’ என்று விசாரித்தால், ‘அது மாணவர்களைப் பாதிக்கும் வணிக வளாகமாக மாற்றும் திட்டம்’ என்று பதில் வந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் முனைவர் பழனி நம்மிடம் பேசினார்.

“அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றுவதன் மூலம் அக்கல்லூரிகளை தரம் உயர்த்துகிறோம் என்று கூறுகின்றனர். இது முதலில் தவறான வாதம். இந்தக் கல்லூரிகளை பல்கலைக்-கழகங்-களாக மாற்றுவதன் மூலம் வெகுஜன, ஏழை மாணவர்களிடம் இருந்து இந்தக் கல்லூரிகளை தனிமைப்படுத்துகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு சீனாவில் இருப்பதுபோல், இந்தியாவிலும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை மேம்படுத்துவதற்காக, பல்கலைக்கழக மானியக்குழு நிதி உதவியுடன் புதிய பல்கலைக் கழகங்களை ஏற்படுத்த உள்ளதாக அறிவித்தது. அவ்வாறு அறிவித்ததில் எந்தத் தவறும் இல்லை. அதற்குப் புதிய பல்கலைக்கழகங்களைத்தான் ஏற்படுத்த வேண்டுமே தவிர, தற்போது செயல்பட்டு வரும் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றக் கூடாது” என்றார்.

“தற்போது இருக்கும் கல்லூரிகளை பல்கலைக்-கழகமாக மாற்றுவதால் யாருக்கு, எந்த விதமான இழப்பு ஏற்படும்?” என்று இடைமறித்துக் கேட்டோம்.

“ஏற்கெனவே அரசுக் கல்லூரிகளாகச் செயல்பட்டு வருபவற்றை பல்கலைக்கழகமாக மாற்றும்போது, அந்தக் கல்லூரி மாணவர்கள், கல்லூரியில் பணி-யாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான பணியாளர்கள் என முத்தரப்பினருக்குமே பல-நிலை-களில் பாதிப்பு ஏற்படும்.

சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி, ராணிமேரி கல்லூரி, கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி, கும்ப-கோணம் அரசு மகளிர் கல்லூரி, கோவை அரசுக் கல்லூரி ஆகிய கல்லூரிகளை ஒருமை(யுனிடெரி) பல்கலைக்-கழகமாக மாற்ற அரசு முடிவுசெய்து, கடந்த ஆண்டே சட்ட மசோதா கொண்டு வர முயற்சி செய்தனர்.

அப்போது கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்புக் குழு சார்பில் பல்வேறு அரசியல் கட்சிகளையும் சந்தித்து எங்களது கோரிக்கைகளை கூறியதன் விளைவாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அந்தக் குறிப்பிட்ட அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அவர்களது ஒப்புதல்பெற்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் இது தொடர்பாக நடந்த கலந்தாய்வில் எந்தக் கல்லூரியிலும் அந்தக் கல்லூரியை பல்கலைக்கழக-மாக மாற்றுவதற்கு உரிய ஒப்புதலைப் பெறமுடிய-வில்லை.

இந்த நிலையில், அவசரச் சட்டத்தின் மூலம் இதற்கான அறிவிப்பு வரும் என்று கூறப்பட்ட சூழலில் அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் முதல்வருக்கும், உயர் கல்வித்துறைக்கும் முறையான கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. அப்போது முதல்வர் கருணாநிதி, ‘உங்களது கோரிக்கைகள் கவனத்துடன் பரிசீலிக்கப்படும். யாரையும் பாதிக்கும் முடிவுகள் எடுக்கப்படாது’ என்று கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு குழுவிற்குக் கடிதம் மூலம் உறுதி கொடுத்தார். தற்போது முதல்வரின் வாக்குறுதி-யையும் மீறி அந்த ஐந்து கல்லூரிகளையும் பல்கலைக் கழகமாக மாற்ற அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அதற்கு அறிகுறியாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கண்ட ஐந்து கல்லூரிகளுக்கும் முதல்வர் நியமிக்க-வில்லை. அந்தக் கல்லூரிகளுக்குப் பல்வேறு பேராசிரியர்கள் இடமாறுதல் கேட்கும் நிலையில் இருக்கும் போதும், ஜூன் 26-ம் தேதி நடைபெற உள்ள அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில், இந்தக் கல்லூரிகள் தவிர இதர கல்லூரிகளுக்குத்தான் மாறுதல் பெற முடியும் என்று அறிவித்திருக்கின்றனர். அந்தக் குறிப்பிட்ட ஐந்து கல்லூரிகளையும் பல்கலைக்கழகமாக மாற்றும் ரகசியத் திட்டம் அவர்களுக்கு இருப்பதைத்தான் இது காட்டுகிறது” என்றார்.

தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர்(பொறுப்பு) தமிழ்மணி நம்மிடம் பேசினார்.

“இந்தக் கல்லூரிகளை ஒருமை பல்கலைக்கழகமாக மாற்றும்போது இந்தப் பல்கலைக்கழகத்தில் வேறு கல்லூரிகள் இணையாது. மேலும் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டதில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே பல்கலைக்கழக மானியக்குழு நிதி உதவி வழங்கும். அதன் பிறகு அந்தப் பல்கலைக்கழகங்கள் தங்களது நடைமுறை செலவுகளுக்குத் தேவையான நிதியை, அவர்களே திரட்டிக்கொள்ள வேண்டும் என்று யூ.ஜி.சி. விதி கூறுகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் வேறு கல்லூரிகளும் இணைவு பெறாத நிலையில் அந்தப் பல்கலைக்கழகம் வணிகவளாகம் ஆவதைத் தடுக்க முடியாது.

மேலும் பல்கலைக்கழகத்தில் இளங்-கலை வகுப்புகளை எடுத்து விடுவார்கள். கோவையில் ஒரே ஒரு அரசுக் கல்லூரிதான் உள்ளது. இந்தக் கல்லூரியும் பல்கலைக்-கழகமாக மாறி, அங்குள்ள இளங்கலை வகுப்புகள் நிறுத்தப்பட்டால், கோவை மாவட்டத்தில் உள்ள ஏழை மாணவர்கள் தனியார் கல்லூரிக்குத்தான் போக வேண்டும். அதேபோல், கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியும் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு, அங்கும் இளங்கலை வகுப்புகள் எடுக்கப்பட்டால் அவர்கள் எங்கு செல்வார்கள்? அரசுக் கல்லூரிகளில் படிக்கும் பெரும்பான்மையானவர்கள், குறைந்தகட்டணம் என்ற அடிப்படையில் முதல் தலைமுறையாகக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைப்பவர்கள்தான் அதிகம். அவர்களுக்கு இது நிச்சயம் பெரும் இழப்பாக இருக்கும்.

சாதாரணமாக அரசுக் கல்லூரிகளில் படிப்பதற்கான விண்ணப்பத்தின் விலை 27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பல்கலைக்கழகங்களிலோ குறைந்தது 100 முதல் 300 ரூபாய் வரை இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. அதேபோல், அரசுக் கல்லூரிகளில் எம்.சி.ஏ. படிப்புக்கான கல்விக் கட்டணம் ஆயிரத்து ஐநூறு ரூபாய். ஆனால், பல்கலைக்கழகங்களில் ஏழாயிரம் முதல் பத்தொன்பதாயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பல்கலைக் கழகத்தின் கதவுகள் ஏழைகளுக்கு எப்போதும் திறக்காது என்பதற்கான உதாரணங்கள்தான்.

அது மட்டுமில்லாமல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்ட எவருக்கும் பணி பாதுகாப்பு இருக்காது. இதற்குக் கடந்த காலங்களில் பல்வேறு உதாரணங்கள் உண்டு. அதேபோல், பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்படும் பணியாளர்கள் மற்றும் நிரப்பப்படும் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட எதிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படாது. ஏற்கெனவே பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாளர் நியமனத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாகப் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதேதான் இந்தப் பல்கலைக்கழகங்களிலும் ஏற்படும்.

இந்தப் புதிய பல்கலைக்கழகத்தின் மூலம் ஏற்கெனவே உயர்கல்வித்துறையில் குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டுவரும் துணைவேந்தர்களின் எண்ணிக்கைதான் உயரும். மாணவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அப்படியே இவர்களுக்கு ஒருமை பல்கலைக்-கழகம் அமைப்பதுதான் லட்சியம் என்றால் புதிதாக உருவாக்கிக் கொள்ளட்டும். அதற்காக ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்-காகச் செயல்பட்டு வரும் கல்லூரி-களை பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டாம் என்பதுதான் எங்களது கோரிக்கை” என்றார் கோபத்தோடு.

இந்தப் பிரச்னை குறித்து பெயர் சொல்ல விரும்பாமல் பேசினார் ஒரு பேராசிரியர். “ஒரு துணைவேந்தர் நினைத்தால் எந்தப் பணி-யாளரையும் வேலையை விட்டு நீக்க முடியும். தேவை இல்லை என்றாலும் கூட எத்தனை பணியாளரையும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ள முடியும். அரசியல் கட்சிகள் தங்களுக்கு வேண்டிய நான்கு பேருக்கு சிகப்பு விளக்கு காரில் செல்ல கூடிய அந்தஸ்தைப் பெற்றுத் தர மட்டும்தான் இந்தப் பல்கலைக்கழகங்கள் உதவும். ஏற்கெனவே உள்ள பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் செயல்பட வைக்க நிறைய சட்ட திருத்தங்கள் கொண்டு வர வேண்டி நிலை இருக்கிறது. முதலில் அதை சரி செய்துவிட்டு புதிய பல்கலைக்-கழகத்தை உருவாக்கலாம். இல்லாவிட்டால் இதனால் எந்த பயனும் இருக்காது” என்றார்.

ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்-களில் இடஒதுக்கீடு கொண்டு வருவதற்காக, தமிழகத்தில் தனி-யாகப் பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் முதல்வர் கருணாநிதி. அவரது ஆட்சியிலேயே ஏழை, பிற்படுத்தப்பட்ட மக்கள் உயர் கல்வி பெறும் வகையில் செயல்-படும் கல்லூரிகளை உயர் கல்வித்-துறையே சீரழிக்கத் திட்டமிடுகிறது என்கின்றனர் கல்வியாளர்கள். இதில் உடனடியாக முதல்வர் தலை-யிட்டு இந்தச் சீரழிவை தடுக்க வேண்டும் என்று அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் வேண்டுகிறது. ஏழை மக்களின் கல்விக் கதவு அடைக்கப்படாமல் காக்கப்-படுமா? என்பது இந்தச் சட்டமன்றத் தொடரில் தெரிந்துவிடும்.



*





சுந்தர.குமரேசன்



Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நமது நிருபரை கடத்திய தி.மு.க.வினர் மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்!
இது எந்தவகை ஜனநாயகம்?
மீண்டும்திறக்கப்படுமா ‘டன்லப்’ தொழிற்சாலை!
யானையின் மரணமூம் சாமானியனின் சாவும்!
கன்னியாகுமரி கண்ணீர்விடும் சுற்றுலாப் பயணிகள்!
பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!
காணாமல் போகும் வைகை!
“கட்சி சொத்தை கைமாற்றிவிட்டார்!”
எண்ணத்தைச் சொல்கிறேன்
“ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் வேலையா?”
நெல்லை சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு:
விடுதலைப் புலிகளின் இடத்தை நிரப்புவது யார்?
தூங்கும்போது கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!
தூத்துக்குடியில் புத்துயிர் பெறுமா உப்புத் தொழில்?
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டம்: ஏழைகளின் உயர்வல்விக்கு வேட்டு?
நாளெல்லாம் வெடிச்சத்தம் சிக்கித் தவிக்கும் சித்தேரி!
நடவடிக்கை எடுத்த விருது நகர் கலெக்டர்!