முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document


தூங்கும்போது கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!
-தி.மு.க.ஊராட்சி தலைவருக்கு ஏற்பட்ட கதி




திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஒன்றியம் மருசூர் கிராமத்தில் ஜூன் 23-ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் ஊரே அதிர வைக்கும் வெடிச் சத்தம். தூங்கிக் கொண்டிருந்த கிராம மக்கள் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடி வந்தனர்.

சத்தம் வந்த திசை நோக்கிச் சென்றபோதுதான், அச்சத்தம் அந்த தி.மு.க. கிராமத் தலைவர் சுந்தரமூர்த்தியின் வீட்டிலிருந்து வந்திருப்பது தெரிந்தது. தலைவரை யாரோ வெடிகுண்டு வைத்து கொன்றுவிட்டார்கள் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியது. விசாரணையில் இறங்கினோம். இந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர் தி.மு.க.வைச் சார்ந்த சுந்தரமூர்த்தி. இவர் தி.மு.க.விலிருந்து ம.தி.மு.க.விற்குச் சென்று மீண்டும் தி.மு.க.விற்குத் திரும்பியவர். கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் அவருடைய மனைவியை நிற்க வைத்து தோற்றவர். இம் முறை இவரே தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மக்களிடம் மிகவும் எளிமை-யாகப் பழகுபவர். சாலையில் சின்னஞ்-சிறுசுகள், ஊர்த் தலைவரை நிறுத்தி கேள்வி கேட்டால் கூட, நின்று பதில் சொல்வார். அவருக்கென ஊரில் யாரும் எதிரிகளே கிடையாது. இதுதான் நமக்குக் கிடைத்த செய்தி.

எதிரிகளே இல்லாத ஒருவரை எப்படி வெடிகுண்டு வீசி கொன்றிருக்க முடியும். சம்பவம் நடந்த சுந்தரமூர்த்தி வீட்டின் அருகே கூடியிருந்தவர்களிடம் மெதுவாக விசாரித்தோம்.

“23-ம் தேதி நள்ளிரவு 12 மணி இருக்கும். திடீர்னு ஊரே அதிர்ந்தது மாதிரி ஒரு சத்தம். உடனே நாங்கெல்லாம் பதறியடித்து பயந்து எழுந்து பார்த்தோம். மறுபடியும் அதே மாதிரி சத்தம். பிறகுதான் தெரிஞ்சுது, சத்தம் தலைவர் வீட்டுல இருந்து வந்ததுன்னு. உடனே கிராம மக்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தலைவரு வீட்டுக்கிட்டே போனோம். மறுபடியும் வெடிச்சத்தம் உடனே பயந்து நின்னுட்டோம்.

அவர் வீட்டைச் சுத்தி ஒரே நாத்தம், தாங்க முடியல. கரும் புகை வந்ததாலே, வீட்டுக்குள் போகமுடியலை. கரன்டாலதான் ஏதோ விபத்துன்னு நினைச்சி, உடனே டிரன்ஸ்பார்மரை ஆஃப் பண்ணிட்டு வந்து டார்ச் லைட்டோட தலைவரு வீட்டுக்குள்ள போனோம். அங்க தலைவரோட மனைவி, குழந்தைங்க வெளியே வந்து கத்திக்கிட்டு இருந்தாங்க. நாங்க தலைவரு ரூம் பக்கம் ஓடினோம். அங்க, தலைவரு கட்டில் மேல கரிக்கட்டையா இருந்தபடியே முணகிய சத்தம் கேட்டது.

உடனே வெளியே தூக்கிட்டு வந்து போட்டோம். கொஞ்ச நேரத்துல தலைவரு செத்துட்டாரு. யாரோ தலைவருக்கு வேண்டாதவங்க வெடிகுண்டு வச்சிதான் கொன்னுட்டாங்கன்னு” அதிர்ச்சியுடன் கூறினார்கள்.

தொடர்ந்து வீட்டினுள் இங்கும்அங்குமாக நடமாடிக்-கொண்டிருந்த அவரது மனைவி செந்தாமரையிடம் பேசினோம். அவரது கண்ணில் கணவர் இறந்த சோகம் துளியும் தெரிய-வில்லை. அவரிடம் பேசிய-போது,“என் சொந்த ஊர் நெய்-வேலிக்குப் பக்கத்துல உள்ள வடலூர். போன தேர்தல்ல ஊராட்சி மன்றத் தலைவருக்கு என்ன போட்டியிட வைச்சாரு. ஆன நான் தோத்துட்டேன். இப்போ இவரு நின்னு ஜெயிச்சிட்டாரு. ஜெயிச்சதும் ஊருக்கு நல்லது செய்யணும்னு சொல்லு-வாரு. அதுபோல செஞ்சிக்கிட்டு வந்தாரு. இவரு இப்படிச் செய்யறதைப் பார்த்து நிறையப் பேரு இவரு மேல ரொம்பப் பொறாமையா இருந்தாங்க.

கட்சியில இவரோட வளர்ச்சி யாருக்கும் பிடிக்கல. அடிக்கடி வந்து அவரு என்கிட்ட இதைச் சொல்லுவாரு. அது யாரு?ன்னு கேட்டா சொல்ல மாட்டாரு. வெளிய கூட என்ன தனியா அனுப்ப மாட்டாரு. நான் என் பிள்ளைங்க எல்லாம் ஹால்லதான் தூங்குவோம். அவர் மட்டும் தனியா அந்த ரூம்ல படுத்துக்குவாரு. எப்போதும் ஜன்னல திறந்து வச்சிக்கிட்டுதான் தூங்குவாரு. அந்த ஜன்னல் வழியாத்தான் யாரோ டைம் பாம் வச்சி அவர கொன்னுட்டாங்க” எனக் கண்கலங்கினார்.

சுந்தரமூர்த்திக்கு எதிரிகளே இல்லை என்கிறது ஊர். ஆனால், எதிரிகள் இருப்பதாகச் சொல்கிறார் மனைவி. போலீஸார் வழக்கம்போல் விசாரணையில் இறங்கினர். சுந்தரமூர்த்தியின் அறை-யிலிருந்து வெடித்த நிலையில் ஒரு நாட்டு வெடிகுண்டும், வெடிக்காத நிலையில் ஒரு நாட்டு வெடிகுண்டையும் போலீஸார் கைப்பற்றினர்.

தமிழக சட்டமன்றம் நடக்கும் நேரத்தில் ஒரு தி.மு.க. தலைவர் வெடிகுண்டு வீச்சுக்-குப் பலியான சம்பவத்தால், மருசூரில் வட மண்டல ஐ.ஜி. ரமேஷ் குடவாலா, டி.ஐ.ஜி. தாமரைக்கண்ணன், எஸ்.பி. பன்னீர்-செல்வம் உள்ளிட்ட அத்தனை அதிகாரி-களும் ஆஜராகி இருந்தனர். மோப்ப நாய் பப்பி வந்ததும்தான், விசாரணையில் திடுக் திருப்பம் ஏற்பட்டது.

சுந்தரமூர்த்தி வீட்டிலிருந்து புறப்-பட்ட மோப்ப நாய், எதிர்வீட்டில் இருந்த மதி என்பவரையே மூன்றுமுறை சுற்றிச் சுற்றி வந்தது. அவரை அலேக்-காகத் தூக்கினார்கள். இரண்டே தட்டு. உண்மையை புட்டுப் புட்டு வைத்தார் மதி.

“சார், நானும் அவருடைய மனைவியும் சேர்ந்துதான் அவரைக் கொலை செய்தோம்” என்று சொல்லி-விட்டார் மதி. அன்று இரவே, செந்தா-மரையை பெண் போலீஸார் சூழ, வீடியோ கேமரா சகிதமாக விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர் போலீஸார். செந்தாமரையின் வாக்குமூலம் போலீஸாரை மட்டுமல்ல தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள் ஆழ்த்தி இருக்கிறது.

“என்னோட அக்காவை பெண் பார்க்க வந்தார் சுந்தரமூர்த்தி. திருமண ஏற்பாடு நடந்தபோது, அக்கா வேறு வாலிபருடன் ஓடிவிட்டார். உடனே என்னை சுந்தரமூர்த்திக்குக் கட்டி வைத்துவிட்டனர். கல்யாணம் ஆகும்போது எனக்கு 15 வயது. அப்போது அவருக்கு என்னைவிட 17 வயது அதிகம். கல்யாணமாகி 13 வருடமாகிறது. எனக்கு இப்போது வயது 28. அவருக்கு 42. கல்யாணம் ஆனதிலிருந்தே, எனக்கும் அவருக்கும் ஒத்து வரவில்லை.

தாலி கட்டிவிட்டதால் வாழ்ந்துகொண்டிருந்தேன். இதே ஊரில் போன வருஷம்தான், புது வீடுகட்டி குடியேறினோம். வந்த சில நாட்களிலேயே அவருக்கு மோட்டர் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் கால் உடைந்துபோனது. அப்போது எதிர் வீட்டில் இருந்த மதிதான், ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வார். அடிக்கடி என் வீட்டிற்கு மதி வந்து போனார். அவர் மீது காதல் பிறந்தது.

சுந்தரமூர்த்தி அடிக்கடி சென்னைக்குச் சென்றுவிடுவார். அந்த நாட்களில் மதி என் வீட்டிற்கு வந்துவிடுவார். ஒரு நாள் எங்களது கள்ளத்தொடர்பை கண்டுபிடித்தார். அவரை விட்டு வைத்தால், நமக்கு ஆபத்து என்றார் மதி. பிறகு, மதியே ஐடியாவும் கொடுத்தார். அதன்படியே, ஆரணிக்குச் சென்று ஐந்து லிட்டர் பெட்ரோல் வாங்கி வரவும், பெரிய பெரிய வெடி பட்டாசுகளை வாங்கி வர ஆயிரம் ரூபாயும் கொடுத்து அனுப்பினேன்.

சொன்னபடி வாங்கி வந்தார் மதி. வாங்கி வந்த பட்டாசுக்களை கட்டிலுக்குக் கீழே புடவையில் சுத்தி வைத்தேன். அன்று இரவு இவர் 11 மணிக்கு மேல் வீடு திரும்பினார். அதற்குள் நானும் மதியும் உல்லாசமாக இருந்தோம். அவர் வந்து தூங்கச் சென்றதும் இரவு 12 மணியளவில், பெட்ரோலை அவரது அறையில் ஊற்றி கதவை மூடிவிட்டு கொளுத்திவிட்டோம்” என்று அசராமல் சொன்னார் செந்தாமரை.

செந்தாமரையின் காமத்துக்குப் பலியானது சுந்தரமூர்த்தி மட்டுமல்ல. அவர்களது குழந்தைகளான 12 வயது சுவாதி, எட்டு வயது அருண்குமார் ஆகியோரது வாழ்க்கையும்கூட. தந்தை இறந்து போய், தாய் சிறைக்குப் போய் நடுத்தெருவில் நிற்கும் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம்?

இதுபோன்ற செந்தாமரைகள் இனிமேல் உருவாகாமல் இருந்தால் சரி !

*





தமிழ்



Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நமது நிருபரை கடத்திய தி.மு.க.வினர் மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்!
இது எந்தவகை ஜனநாயகம்?
மீண்டும்திறக்கப்படுமா ‘டன்லப்’ தொழிற்சாலை!
யானையின் மரணமூம் சாமானியனின் சாவும்!
கன்னியாகுமரி கண்ணீர்விடும் சுற்றுலாப் பயணிகள்!
பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!
காணாமல் போகும் வைகை!
“கட்சி சொத்தை கைமாற்றிவிட்டார்!”
எண்ணத்தைச் சொல்கிறேன்
“ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் வேலையா?”
நெல்லை சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு:
விடுதலைப் புலிகளின் இடத்தை நிரப்புவது யார்?
தூங்கும்போது கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!
தூத்துக்குடியில் புத்துயிர் பெறுமா உப்புத் தொழில்?
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டம்: ஏழைகளின் உயர்வல்விக்கு வேட்டு?
நாளெல்லாம் வெடிச்சத்தம் சிக்கித் தவிக்கும் சித்தேரி!
நடவடிக்கை எடுத்த விருது நகர் கலெக்டர்!