விடுதலைப் புலிகளின் இடத்தை நிரப்புவது யார்?
-ஈ.பி.ஆர்.எல்.எப். பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் பேட்டி

இலங்கையில் தமிழீழம் அமைப்பதற்காக, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்த போராட்டம், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியால் நிர்மூலமாகி விட்டது. ஒரு நாட்டு நிர்வாகத்தில் இருக்க வேண்டிய அத்தனை துறை-களையும் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை சர்வதேச அளவில் முக்கிய இடத்தை வகித்தன.
இலங்கையில் 1983---ம் ஆண்டு ஜூலையில் இனக்கலவரம் வெடித்த பிறகு, இனி அங்கு வாழ இயலாது என்பதால் அங்கிருந்து படகுகளில் வெளியேறி தமிழகத்தில் தஞ்சம் புகுந்த அகதிகள் பல லட்சம் பேர். ஆனால், இலங்கையை விட்டு வெளியேறிய அகதிகளைவிட, சொந்த நாட்டின் அகதிகள் முகாமில் அகதிகளாக இருப்பவர்கள் இப்போது அதிகம். இலங்கை அரச படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில் முப்பதாயிரம் மக்கள் கை, கால் உள்ளிட்ட உறுப்புகளை இழந்து அகதிகள் முகாமில் உள்ளனர். இவர்களுக்குச் சரியான சிகிச்சை கிடைக்காமல், தினமும் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
புலிகள் இயக்கத்தின் ஆணிவேரான பிரபாகரன், வீரமரணம் அடைந்துவிட்டார் என்று புலிகளின் உளவுப் பிரிவு சமீபத்தில் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இடத்தை இனி இலங்கையில் நிரப்பப் போவது யார்? அங்குள்ள தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதை அறிய, இலங்கையில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேசிய பொதுச் செயலாளர் ஸ்ரீதரிடம் கேட்டோம்.
“
சென்னையில் தங்கியிருந்த எங்களது இயக்கத் தலைவர் பத்மநாபா, விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்-பட்டதை நாடறியும். இலங்கையில் தன்னை பெரும் சக்தியாகக் காட்டிக்கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கம், போரில் தோல்வி கண்டுள்ளது. புலிகள் இயக்கத்தின் தலைவரும், அடுத்த கட்டத் தலைவர்களும் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த யுத்தத்தால் இலங்கைத் தமிழர்கள் முப்பது ஆண்டுகாலமாக அகதிகளாகத் துன்பங்களை மட்டுமே அனுபவித்து வந்துள்ளனர். இப்போதும் சொந்த நாட்டில், அகதி முகாம்களில் உணவின்றி, மன நிம்மதியின்றி சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர்.
இதுவரை நடந்த யுத்தம் காரணமாக, சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து, வவுனியா உள்ளிட்ட உள்நாட்டு அகதி முகாமில் வாழும் தமிழர்களை இலங்கை அரசு உடனடியாகச் சொந்த இடங்-களில் குடியமர்த்த வேண்டும். போர் முடிந்த பிறகும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள், அகதிகள் முகாம்களில் தொடர்ந்து தங்க வைத்திருப்பதை சாதாரணமாகக் கருத முடியாது.
அவரவர் சொந்த இடங்களில் மக்களை குடியமர்த்திய பிறகு, வடக்கு கிழக்கில் ராணுவச் சூழல் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். ராணுவத்தினர் மத்தியில் வாழ்கிறோம் என்ற எண்ணத்தை நீக்கினால் மட்டுமே மக்கள் அமைதியாக வாழ இயலும். இனிமேல் இலங்கைத் தமிழர்கள் அகதி முகாமிற்குச் செல்ல வேண்டியிருக்காது; உள்நாட்டில் யுத்தம் வராது. ஆகவே எதிர் காலத்தில் சுதந்திரமான வாழ்க்கை நடத்தத் தேவையான வசதிகளை அரசு உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டியது அவசியம்.
இலங்கையில் வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான இடைவெளி ஏற்பட்டுள்ளது. வடக்கில் செயல்பட்ட பல்வேறு அமைப்புகளையும், அதன் தலைவர்களையும் விடுதலைப்புலிகள் அழித்-திருந்தனர். இப்போது ஆற்றல் மிக்கத் தலைவர்கள் உருவாகவும் தமிழ் தலைமைகள் உருவாகவும் அரசு வழிவிட வேண்டும். வன்முறை கலாசாரத்தால் மாசடைந்த வடக்கு மாகாணத்தின் சூழல் சுத்திகரிக்-கப்பட வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் தமிழரின் கட்சிகள் அனைத்தும் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம். ஜனநாயக உணர்வுள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப்., பிளாட், தமிழர் விடுதலை கூட்டணி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட உள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா மாநகராட்சித் தேர்தலில் போட்டி-யிடும் எமது கூட்டணியை தமிழ் மக்கள் ஆதரிப்பர்.
ஏனென்றால், விடுதலைப் புலிகள் வீழ்ச்சிக்குப் பிறகு ஈழ மக்களின் தார்மீக ஆதரவை இந்தக் கூட்டணி மட்டுமே பெற்றுள்ளது. நாங்கள் அமைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டணி, விடுதலைப்புலிகளைப்போல, சர்வாதிகார சிந்தனை கொண்டிருக்கவில்லை. ஜனநாயக அரசியல் உரிமைகளை தமிழ்த் தேசிய கூட்டணி மதிக்கிறது. பிற இயக்கங்களின் தலைவர்களை கொலை செய்யும் ‘பிஸ்டல் கலாசாரம்’ இலங்கையில் களையப்பட வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்தை ஆதரித்ததுபோல, இதுவரை தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தனர். அது போலியாகப் புனையப்-பட்ட கருத்து. விடுதலைப் புலிகளால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தமிழ்த் தேசிய கூட்டணி நிரப்பி, மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை பெற்றுத்தரும் என்று எங்கள் மீது மக்களுக்கு இப்போது நம்பிக்கை வந்துள்ளது. இந்த நம்பிக்கையைக் காப்பாற்றவும் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வினைப் பெற்றுத்-தருவதற்காகவும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி-யாகப் போட்டியிடுகிறோம்.
கடந்த 30 ஆண்டுகளில் புலிகள் நடத்திய போரினால் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள் கணக்கில்லாதவை. மக்கள் மதித்த பல தலைமைகளை புலிகள் முன்பு அழித்-தனர். இதனால் இப்போது புலிகளின் இயக்கம் அழிக்கப்பட்ட-போது, அவர்களை ஆதரிக்க மக்கள் முன்வர-வில்லை என்று நலன்புரி முகா-மில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.
இந்தியர்கள் மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்களும் தீவிர-வாதத்தை ஆதரிப்பதில்லை. ஜனநாயகத்தின் மீது மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை அதிகம். இதை வளர்க்க இலங்கை அரசு, தமிழர் கட்சிகளை சுதந்திரமாக இனிமேல் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்றார் ஸ்ரீதரன்.
தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்த-சங்கரி, பிளாட் இயக்கத்தலைவர் எஸ்.சித்தார்த்தன் ஆகியோருடன் ஸ்ரீதரனும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவைச் சந்தித்து, அகதிகளை மீளக்குடிய-மர்த்துவது பற்றி அண்மையில் பேசியுள்ளனர்.
இந்தியாவின் உதவியோடு இனப்பிரச்னைக்கு தீர்வு!
விடுதலைப் புலிகளை தோற்கடித்த பிறகு தமிழர்களை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய கூட்டணிக்கு மட்டுமே உள்ளது என்று வன்னி மாவட்ட எம்.பி., சி.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருக்கிறார். வவுனியாவில் நடந்த பத்மநாபா தின நிகழ்ச்சியில், பத்மநாபா உருவப்படத்தைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:
“இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டணி, இந்தியத் தலைவர்கள் பலரை சந்தித்து இங்குள்ள நிலைப் பற்றி விவரித்து உள்ளது. இதன் பிறகு இந்தியா பலவித முக்கிய நட-வடிக்கைகளை மேற்-கொண்டுள்ளது. தமிழர்களின் விருப்பத்தைப் பிரதி-பலிக்கும் வகையிலான தீர்வு யோசனைகளை இலங்கை அரசிடம் முன் வைத்தால், அதற்கு ஆதரவு தரத் தயாராக உள்ளதாக இந்தியா தற்போது தெரிவித்துள்ளது. அது-மட்டுமல்ல இந்தத் தீர்வை நடை-முறைப்படுத்த சர்வதேசத்தின் அழுத்தத்தை இலங்கை மீது கொண்டு வர இந்தியா உதவும்.
இதற்கான உறுதியை எமது கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், எம்.பி.க்கள் பிரேம-சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடம் இந்திய அரசும் அதன் தலைவர்களும் அளித்துள்-ளனர். இந்தியாவின் உதவியோடு மட்டுமே எமது நாட்டு இனப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண முடியும் அந்தக் கருத்தின் அடிப்-படை-யிலேயே தமிழ்த் தேசிய கூட்டணி செயல்படுகிறது” என்றார் சிவசக்தி ஆனந்தன்.
*
‘
சண்முக விஸ்வநாதன்